Monday, December 6, 2010

கவிஞர் மு ரா அவர்களின் பட்டிமன்ற பேச்சு:

     
"அவர போட்டா தொவர மொழைக்கும்
தொவர போட்டா அவர மொழைக்கும்
அப்படி ஒரு தேசத்துல கூந்தலே இல்லாதா
ஒரு ராஜகுமாரி
தூரே இல்லாத குடத்த எடுத்துக்கிட்டு
கரையே இல்லாத கொளத்துக்கு தண்ணிக்கு போனாளாம்
அங்க தலையே இல்லாத மான்
வேரே இல்லாத அருகம் புல்ல மேயிரத
கண்ணே இல்லாத குருடன் பாத்துபோட்டு
காலே இல்லாத முடவன் கிட்ட சொல்ல
அவன் துப்பாக்கி எடுத்து சுட்டான்
குண்டு மான் மேல படாம மான் வயித்தில
இருந்த குட்டி மேல பட்டு
குட்டி செத்து போச்சு
அந்த குட்டிய எடுத்து அறுத்து சமச்சி சாப்பிட்டு
தோல காலில்லாத பந்தல்ல காய போட்டாங்க
அத தலையே இல்லாத பருந்து அடிச்சிகிட்டு போக
அத காலே இல்லாத முடவன் வெரட்டிக்கிட்டு போக
அவன் கால்ல குத்துன கண்டன் கத்திரி முள்ளு
அவன் தலை வழியே வெளியே வர
அதுக்கு வைத்தியம் பார்க்க வைத்தியர் கிட்ட போனான்
அவரு சொன்னாரு ஆழ வேறு அரச வேறு புங்க வேறு புரச வேறு
நாலு வேரையும் கை படமா புடிங்கி
உரல் படமா அரச்சி
நாக்கு படமா நக்குடா
இது முதல் நாள் பத்தியம் அப்படினார்
கண்ட கத்திரி வேற கை படமா புடிங்கி
உரல குப்புறக்க போட்டு உலக்க படமா இடிச்சி
புறங்கையால் எடுத்து நக்குடா
இது இரண்டாவது நாள் பத்தியம் என்றார்

இப்படி பட்ட சிறப்பான வைத்தியம் சொன்ன வைத்தியருக்கு
எதாவது சன்மானம் குடுக்கணும்னு சொல்லி
அடியே இல்லாத படிய எடுத்து
ஓட்ட சாக்குல ஒன்பது முலம் உளுந்து அளந்து
சக்கரமே இல்லாத வண்டில பாரம் ஏத்தி
நொண்டி வண்டி ஓட்ட
குருடன் வழி காட்ட
வண்டி பாட்டுக்கு போய்கிட்டே இருந்துச்சாம் "

No comments:

Post a Comment